நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வேட்டுவ பாளையம் பகுதியில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும் 17 வயதில் நட்சத்திரா என்ற மகளும், 11 வயதில் சரவணன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் நட்சத்திரா சிபிஎஸ்இ பிளஸ் 2 படித்து வந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த தேர்வு முடிவில் 3 மார்க்கில் கணக்கு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தார். இதற்கிடையில் பஞ்சாபில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்வதற்காக நட்சத்திரா நுழைவுத் தேர்வு எழுதி இருந்த நிலையில் தேர்வில் தோல்வியடைந்ததால் தோல்வியடைந்ததால் மிகுந்த மனவேதனையில் இருந்தார்.

இதனால் அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்த நிலையில் மயங்கி கிடந்த நட்சத்திராவை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதைத்தொடர்ந்து நட்சத்திராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையில் உயிரிழந்த நட்சத்திராவின் கண்களை மட்டும் அவரது பெற்றோர் தானமாக வழங்க முடிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.