
அதிமுக வெட்கமில்லாத கட்சியாக இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சென்னை ஓட்டேரி குயப்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பாக 6.2 கோடி மதிப்பில் அறிஞர் அண்ணா மாளிகை என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைத்ததோடு ஒன்பது ஜோடிகளுக்கு சீர்வரிசையுடன் கூடிய திருமணத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். பின்னர் பேசிய அவர், மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்காக நான் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் போல் சுயமரியாதை விட்டுக் கொடுத்து வாழாதீர்கள். என்னுடைய காரில் தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஏற வந்தார்கள். அப்போது நான் என் காரில் ஏறினாலும் பரவாயில்லை கமலாயத்துக்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று சொன்னேன். ஆனால் சட்டமன்றத்தில் எந்த காலத்திலும் எங்கள் கார் கமலாயம் போகாது என்று அண்ணன் ஓ பன்னீர்செல்வம் சொன்னார். ஆனால் இரண்டு மணி நேரம் கார் கமலாயத்தில் தான் இருந்தது. இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு கமலாயத்தில் காத்து கிடக்கிறார்கள். அந்த அளவுக்கு வெட்கமில்லாத எதிர்கட்சியாக அதிமுக இருந்து வருகிறது என்றார்.