
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே உள்ள ஒரு பகுதியில் மனோஜ் குமார் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இருவரும் இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மனோஜ் குமார் தன்னுடைய மனைவி மற்றும் தாயாருடன் வசித்து வந்த நிலையில் அவருடைய தாயார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஊருக்கு சென்றிருந்தார்.
அப்போது மனோஜ்குமார் மற்றும் ராக்கி இருவரும் வீட்டில் தனியாக இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மனோஜ் குமார் மற்றும் ராக்கி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று காலை அவரின் தாய் வீட்டிற்கு வந்தபோது இருவரும் வீட்டில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.