
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஒரு பிரபலமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் ஒரு காதல் ஜோடி அறை எடுத்து தங்கினர். இவர்கள் அந்த அறையில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த நிலையில் பின்னர் ஜன்னல் திரையை மூடாமலையே உல்லாசமாக இருக்க ஆரம்பித்தனர்.
இதனை அந்த ஹோட்டல் அருகே உள்ள ஒரு மேம்பாலத்திலிருந்து பைக்கில் சென்ற ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்தார். இதனை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட அது மிகவும் வைரலானது.
இதற்கிடையில் அந்த மேம்பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திடீரென அங்கு வாகனங்களை நிறுத்தி அந்த ஹோட்டல் அறையை வேடிக்கை பார்க்க தொடங்கினர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட ஹோட்டல் அறையை திறந்து அவர்களிடம் ஜன்னலை மூடுமாறு கூறினார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்திய போலீஸார் போக்குவரத்து நெரிசலையும் சரி செய்தனர்.
இந்நிலையில் காதல் ஜோடி தனிமையாக இருந்ததை சட்டவிரோதமாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஜன்னல் திரையை மூடாமல் கவனக்குறைவாக உல்லாசமாக இருந்த காதல் ஜோடிக்கும் கண்டனங்கள் குவிகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.