
பாகிஸ்தானில் ஒரு சாலையில் நடந்த சுவாரசியமான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. லாகூர் நகரை சேர்ந்த ஒரு மனைவி, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் காரில் இருப்பதை நேரில் பார்த்ததும், உடனடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த நபரை தனது காதலியுடன் கையும் களவுமாகப் பிடித்தார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் “Kar Ke Kalesh” என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மனைவி கூச்சலிட்டு, “என் கணவர் இந்த பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார்” என்று பொதுமக்கள் முன்னிலையில் கூறுகிறார்.
Extra-Marital Affair Kalesh, Pakistan (Wife Caught Lahore police station SHO making love with another girl on the street)
pic.twitter.com/sBdnoAM7g5— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 25, 2025
காவல்துறையினர் வந்து சமாதானப்படுத்த முயன்றபோதும், அவரை அமைதிப்படுத்த முடியாமல் இருந்தனர். இந்த சம்பவம் ஜூன் 25 ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டதிலிருந்து 62,000-க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தியுள்ளதாவது, பாகிஸ்தானில் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்வது சட்டபூர்வமானது என்றாலும், இந்த வகையான நடவடிக்கைகள் மனைவியிடம் நம்பிக்கைக்கேடு ஏற்படுத்தும் என்பதே. சிலர் இந்த மனைவியின் தன்னம்பிக்கையும் நேர்மையும் பாராட்டத்தக்கது என பதிவிட்டுள்ளனர்.
குறிப்பு: இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டவை. அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.