
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மகராஜ் கஞ்ச் பகுதியில் சன்னி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு செல்போன் பழுது பார்க்கும் கடை மற்றும் நகை கடை வைத்துள்ளார். இவர் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு தேடிய போது பிரியங்கா என்ற 23 வயது பெண்ணை பார்த்தார். இருவருக்கும் முதல் சந்திப்பின் போதே காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்தனர். கடந்த 3 வருடங்களாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவரும் அவர்களது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் நவம்பர் மாதம் 29ஆம் தேதி திருமணதேதி முடிவானது. இந்நிலையில் நேற்று முன்தினம் சன்னி மற்றும் பிரியங்கா இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென ஏதோ வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கோபத்தில் பிரியங்கா வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் பின்னர் அவரது உடலை சவப்பெட்டியில் வைத்தனர்.
இந்த விவகாரம் சன்னி தெரியவந்த நிலையில் அவர் கதறி துடித்ததோடு பிரியங்காவை தன்னுடைய மனைவியாக்க வேண்டும் என குடும்பத்தினரிடம் கூறிய நிலையில் அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் உள்ளூர் பூசாரி ஒருவரை வரவழைத்து திருமணத்திற்கான மந்திரங்களை ஓதிய நிலையில் பாதையில் இருந்த தன்னுடைய காதலிக்கு குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
அந்த சவப்பெட்டியை ஏழு முறை சுற்றி வந்து அவர் திருமண சடங்குகளையும் முடித்தார். இந்த செயல் அங்கிருந்தவர்களை மிகவும் உருக்கிய நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பிரியங்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் தற்போது அவரது பிணத்துக்கு குங்குமம் வைத்து திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துவிட்டேன் என கண்ணீர் மல்க கூறினார்.