
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா நதியில், மார்ச் 6, 2025 அன்று ஒரு இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. முதலில் அடையாளம் தெரியாத மரணம் எனக் கருதப்பட்ட இதற்குப் பின்னர், பிரேத பரிசோதனை முடிவில் அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் வழக்கை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர். சில நாட்கள் கழித்து, மரணமடைந்த பெண் 22 வயதான சுவாதி என்ற மாணவி என்பதும் ஹாவேரி மாவட்டத்தின் ரட்டிஹள்ளி தாலுகா மசூருவைச் சேர்ந்த ரமேஷ் ப்யாடாகி என்பவரின் மகளாகவும் அடையாளம் காணப்பட்டார்.
சுவாதி, மார்ச் 3ஆம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அதன்பின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மார்ச் 7 அன்று ஹிரேகேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையின் போது, 28 வயதான நயாஸ் என்பவரை போலீசார் மார்ச் 13 அன்று கைது செய்தனர். அவர் போலீசாரிடம் உண்மையை ஒப்புகொண்டு, துர்கா சாரி பதிகர் மற்றும் வினாயக் பூஜார் ஆகிய இருவரும் இதில் தொடர்புடையவர்கள் என்றும், தங்களுடன் சுவாதியை ரணிபென்னூர் நகரில் உள்ள சுவர்ணா பூங்காவுக்கு அழைத்துச் சென்ற பின்னர், ரட்டிஹள்ளியில் இருக்கும் ஒரு காலியாக இருந்த பள்ளிக்கூடத்திற்கு கொண்டு சென்று, புடவையால் கழுத்தை இறுக்கி கொன்றதாகவும் தெரிவித்தார். பின்னர், உடலை இரவு 11 மணியளவில் வினாயக்கின் காரில் கொண்டு சென்று துங்கபத்ரா நதியில் எறிந்ததாக தெரிவித்தார்.
சுவாதியின் தாய் தனது மகளை இழந்ததில் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியிருக்கிறார். “அவள் வெளியில் சென்று வருகிறேன் என்றாள், ஆனால் திரும்பவில்லை. எங்கு தேடியும் காணவில்லை, அதன் பிறகே புகார் செய்தோம். என்னுடைய மகளை யார் கொன்றாலும், நண்பராக இருந்தாலோ வேறாக இருந்தாலோ, அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்று வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக்கூடாது,” என்று கூறி, போலீசாரை முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
ஹாவேரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்ஷு குமார், “மார்ச் 6 அன்று ஹல்கேரி காவல் நிலையத்திற்கு அருகில், துங்கபத்ரா நதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனை மூலம் இது கொலை என உறுதி செய்யப்பட்டது. மார்ச் 11 அன்று, உடல் ஸ்வாதி தான் என்று அடையாளம் காணப்பட்டது. விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் – நயாஸ், வினாயக் மற்றும் துர்கா சாரி பதிகர் – தொடர்புடையவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டனர். மார்ச் 3 அன்று, அவர்கள் சுவாதியை அழைத்துச் சென்று கொலை செய்து, உடலை நதியில் வீசினர். நயாஸ் கைதான நிலையில், மற்ற இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க இரண்டு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார். மேலும், குற்றம் நடக்கச் செய்யப் பயன்பட்ட காரணங்களைப் பற்றிய விரிவான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.