
இலங்கை வவுனியா மாவட்டம் புலியங்குளம் பகுதியில், குடும்பத் தகராறில் 32 வயதுடைய அரசு பள்ளி ஆசிரியர் சுவர்ணலதா கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலியங்குளம் அரசு பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வந்த சுவர்ணலதா, தனது கணவரால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை, சுவர்ணலதாவின் கணவர், தனது மனைவியின் தலை பகுதியை பிளாஸ்டிக் பையில் வைத்து, மோட்டார் சைக்கிளில் புளியங்குளம் போலிஸ் நிலையம் வந்து, “தனது மனைவியை நயினாமடு காட்டுப்பகுதியில் கொன்று விட்டேன்” என கூறி சரணடைந்தார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறும், மனைவியின் நடத்தை மீது அவர் கொண்டிருந்த சந்தேகமும் தான் இந்த கொலைக்கு காரணமாக இருந்ததாக கூறியுள்ளார். தற்போது, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுப்பகுதியில் சடலத்தின் மீதமுள்ள பகுதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.