தைவான் நாட்டில் ஹாவோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஜுவான் என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை திருமணமாகி 3 வருடங்களாக சிறப்பான முறையில் சென்றது. அதன் பின் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு பிரச்சனை ஆரம்பித்துள்ளது. அதாவது அவருடைய மனைவி ஒவ்வொரு முறையும் உடலுறவு பின் அவருடைய கணவரிடம் பணம் வசூலித்துள்ளார். அதாவது 2017 ஆம் ஆண்டிலிருந்து மாதத்திற்கு ஒருமுறைதான் உடலுறவு வைக்க வேண்டும் என்று அவருடைய மனைவி கூறினார்.

இதைத்தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு அதற்கு முற்றிலும் மறுத்த  அவருடைய மனைவி அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தான் தன் கணவர் தன்னிடம் பேச வேண்டும் என்றாலோ அல்லது உடலுறவு வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டாலோ பணம் தர வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளார். அதாவது அவருடைய கணவர் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்ததால் அதிர்ச்சி அடைந்த மனைவி நான் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று கூறி வழக்கை வாபஸ் பெற வைத்தார்.

அதன் பிறகு தான் பணம் வசூலிக்க தொடங்கியுள்ளார். அவர் ஒவ்வொரு முறையும் தன் கணவரிடமிருந்து ரூ.1200 வசூலித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் இந்த வருடம் தன் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்ட நிலையில் ஜூவோவுக்கு அதில் விருப்பமில்லாததால் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் தன்னுடைய கணவர் லாரி ஓட்டுனராக இருக்கும் நிலையில் குடும்பத்தினருக்காக எந்தவித செலவு செய்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று அவர்களின் குழந்தைகளும் எங்களிடம் பேச வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனார். இதனால் வழக்கின் போக்கு மாறிய நிலையில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனைவரும் அழைக்கப்பட்டனர். அந்த பேச்சுவார்த்தையின் போது கணவர் குடும்பத்தினருக்கு மாதம் இந்திய மதிப்பில் ரூ.50,000 தருவதாக ஒப்புக்கொண்டார். மேலும் இதனால் அந்த பிரச்சனை முழுவதுமாக முடிவடைந்து வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.