
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்காடு பகுதியில் விஜயகுமார் (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்தா டாக்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஆதர்ஷ் என்ற மகன் இருக்கிறார். இதில் ஆதர்ஷ் தந்தையின் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். இதனிடையே விஜயகுமார் அதிக அளவில் கடன் வாங்கியதாக கூறப்படும் நிலையில் வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்பத் தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று காலை விஷ மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதில் மயங்கி விழுந்த உயிரிழந்த அவர் ஒரு தற்கொலை கடிதமும் எழுதியுள்ளார். அதில் கடன் கொடுத்தவர்களின் பெயர் மற்றும் முகவரி எழுதப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.