மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வ.உ.சி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி. கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் ஜெயலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயலட்சுமி தான் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது சாமி அங்கு சென்று தனது மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் சாமியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் சாமிக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.