சமூக ஊடகங்களில் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதில், ஒரு தந்தை தனது குழந்தையுடன் பூங்காவிற்கு சென்றபோது, தனது மனைவி மற்றொரு ஆணுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்டுள்ளார். அந்த பெண் தனது கணவருக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்திருப்பது வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது.

 

வீடியோவில், அந்த நபர் தனது 4-5 மாதக் குழந்தையுடன் பூங்காவிற்கு வருகிறார். அங்கு அவரது மனைவி  மற்றொரு ஆணுடன் மிக நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் கண்டு சந்தேகிக்கிறார். அருகில் சென்று பார்த்தபோது, அந்தப் பெண் அவரது மனைவி என்பது உறுதியாகிறது. உடனே அவர் கோபத்துடன் அந்த இடத்திற்கு சென்று மனைவியிடம் சண்டை போட்டார்.

உடனே அந்த மனைவி பதட்டம் அடைந்து நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள் தேவையில்லாமல் கற்பனை செய்கிறீர்கள் என்று கூறினார். இதனால் கோபம் அடைந்த கணவர் குழந்தைக்காக தான் எல்லாத்தையும் பொறுத்துக் கொள்கிறேன். நான் தான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன். நீ குழந்தைக்காக எதுவுமே செய்யவில்லை என கூறினார்.

அதோடு இனி உன்னிடம் பேச விரும்பவில்லை தயவுசெய்து இங்கிருந்து போய் விடுங்கள் எனவும் கூறுகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த பெண்ணுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கள்ளக்காதல் மோகத்தால் இப்படி நான்கு ஐந்து மாத குழந்தையை விட்டுவிட்டு கணவனையும் இப்படி ஒரு நிலைக்கு தள்ளியது வேதனையாக மாறியுள்ளது.