கிருஷ்ணகிரி மாவட்டம் காரண்டபள்ளி பகுதியில் கல் குவாரி அமைந்துள்ளது. இந்த கல்குவாரி குட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழுகிய நிலையில் வாலிபரின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலுமணி என்பது தெரியவந்தது.

வேலுமணி பி.செட்டி பள்ளி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் மஞ்சுநாத்தின் மனைவி சில்பாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ள காதலாக மாறியது. சில்பாவுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

ஷில்பா மற்றும் வேலுமணிக்கு இடையேயான உறவைப் பற்றிய அறிந்த மஞ்சுநாத் தனது மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சில்பா வேலு மணியை திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு சென்று விட்டார். அங்கு செல்ஃபாவுக்கும் வேல்மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் சில்பா தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பினார். இருவரையும் குடும்பத்தினர் சேர்த்து வைத்தனர். இதனை தொடர்ந்து வேலுமணி மீண்டும் சில்பாவை தொந்தரவு செய்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த வேலுமணியை சில்பா, மஞ்சுநாத், அவரது அண்ணன் மோகன் பாபு ஆகியோர் வீட்டுக்குள் அடைத்து வைத்து 4 நாட்களாக சித்திரவதை செய்தனர்.

அதன் பிறகு அவரை கொலை செய்து கல்குவாரி குட்டையில் வீசியது தெரியவந்தது. இதனால் மஞ்சுநாத், சில்பா மோகன்பாபு, அவர்களுக்கு உடந்தையாக இருந்த மதுசூதனன் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.