மூதாட்டி ஒருவர் 105 வயதில் முதுகலை பட்டம் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த மூதாட்டி ஜின்னி ஹிஸ்லோப்பின். இவருடைய கணவர் இரண்டாம் உலக போரில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். இதன் காரணமாக இந்த மூதாட்டியால் படிப்பை தொடரமுடியாமல் போயுள்ளது.

இதையடுத்து, பாதியில் விட்ட முதுகலை பட்டப்படிப்பை சுமார் 80 ஆண்டுகளுக்கு பின் படித்து பட்டம் பெற்றுள்ளார் மூதாட்டி ஜின்னி ஹிஸ்லோப். இதற்காக நீண்ட வருடங்களாக  காத்திருந்ததாகவும், தற்போது  தன்னுடைய ஆசை  நிறைவேறியுள்ளதாகவும் மூதாட்டி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.