
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறப்பு கடன் உதவி திட்டங்களும் மானிய விலையில் கடன் வழங்கப்படும் திட்டங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை திருமண திட்டத்தின் மூலமாக புதுமண தம்பதிகளுக்கு மத்திய அரசு 2.5 லட்சம் வழங்குகிறது.
ஆனால் முதல் முறையாக கலப்பு திருமணம் செய்தவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள். திருமணம் செய்து கொள்ளும் தரப்பினரில் ஒருவர் பட்டியல் ஜாதியை சேர்ந்தவராகவும் மற்றொருவர் அட்டவணைப்படுத்தப்படாத ஜாதியை சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். திருமண சான்றிதழ் கட்டாயம் தேவைப்படும். இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் அறிய https://ambedkarfoundation.nic.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.