கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலுமே C மற்றும் D கிரேடு வேலைகள் அனைத்தும் கன்னடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கையை வாழ, அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

அவர்கள் கன்னட நிலத்தில் வேலைவாய்ப்பு இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் அரசின் விருப்பம். அவர்களின் நலனை கவனிப்பதே எங்கள் முன்னுரிமை  என்று தெரிவித்துள்ளார்.