
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹரின். இவர் சமீபத்தில் தன்னுடைய கரு முட்டையை உறைய வைத்திருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவலை திரித்து சிலர் தவறான செய்தி பரப்பி வருவதாக நடிகை மெஹரின் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கருமுட்டை குறித்து நான் வெளியிட்ட வீடியோவை சிலர் தவறாக புரிந்து கொண்டு அவதூறு பரப்புகிறார்கள்.
இது மன்னிக்க முடியாத குற்றம். கருமுட்டையை உறைய வைக்கும் விஷயம் குறித்து நான் தைரியமாக பேசியுள்ளேன். பெண்கள் குழந்தைக்காக அவசரமாக கருத்தரிக்க வேண்டிய அவசியம் கிடையாது. குழந்தை தற்போது வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு கருமுட்டைகளை பத்திரப்படுத்தி வைக்கும் முறை ஒரு வரப்பிரசாதம். இதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் சிலர் அவதூறு பரப்புகிறார்கள். மேலும் தவறான செய்தி பரப்பியவர்கள் உடனே அதை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.