
பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று பழனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மதுரை அரிடாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கும் நன்றி. விவசாயிகளின் கோரிக்கையை தேசிய தலைமைக்கு எடுத்துச் சென்ற பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பாராட்டுகள் என்றார். அதன் பிறகு அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு 6 போலீசார் வாக்கிடாக்கி மூலம் உதவி செய்துள்ளனர். காவல்துறைக்கு 50 சதவீதம் ஈரல் அழுகிப் போய்விட்டது என கருணாநிதி ஒருமுறை கூறியுள்ளார். தற்போது அவருடைய மகன் ஆட்சியில் காவல்துறையின் ஈரல் 100% அழுகிவிட்டது. மாணவி சொன்ன அந்த குறிப்பிட்ட சார் ஒருவர் கிடையாது எனவும் அது நான்கு சார்கள் என்றும் தற்போது தகவல்கள் வெளிவருகிறது. மேலும் தற்போது ஸ்டாலினின் சர்க்கார் அரசாங்கம் எவ்வளவு கீழ்தரமாக கேவலமாக அழுகிப்போய் அருகதை அற்ற அரசாக இருக்கிறது என்பதை பாருங்கள் என்று கூறினார்.