
ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்ற கொண்டிருக்கும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்லா விட்டாலும் பரவாயில்லை இந்தியாவிடம் மற்றும் தோற்றுவிடாதீர்கள் என பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.
இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே அதில் எப்போதும் அழுத்தம் அதிகமாகவே இருக்கும். இந்த போட்டியில் இருநாட்டு ரசிகர்கள் தவிர உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் பார்த்து மகிழும் போட்டியாகவே இது இருக்கிறது. 2021 டி20 உலக கோப்பை போட்டி வரை நாங்கள் இதுவரை இந்தியாவை வென்றது கிடையாது. அந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பிசிபி தலைவராக இருந்த ரமீஸ் ராஜா எங்களை சந்தித்து பேசினார். அவர் உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவிடம் மட்டும் தோற்காதீர்கள் என்று அழுத்தமாக கூறினார்.
அதன் பிறகு எந்த ஒரு பெரிய போட்டியிலும் விளையாடாமல் இந்தியாவுடன் விளையாடி வென்றது குறித்த தன்னுடைய அனுபவத்தை பற்றியும் பேசியுள்ளார். அதாவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விளையாடினேன். ஆனால் இந்தியாவை வென்ற பிறகு பாகிஸ்தான் செல்லும் போது தான் அந்த போட்டி எவ்வளவு முக்கியமானது என்பது எனக்கு புரிந்தது. ஏனெனில் அந்த போட்டிக்கு பிறகு பாகிஸ்தானில் எங்கு சென்றாலும் என்னிடம் மக்கள் பணம் வாங்க மறுத்தார்கள். அவர்கள் எங்களை அவ்வளவு பாராட்டி பேசினார்கள். மேலும் அப்போதுதான் அந்த போட்டியின் முக்கியத்துவம் புரிந்தது என்று கூறினார்.