ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 23ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே நீலகிரி மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 29ம் தேதி ஓணம் பண்டிகை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடுமுறையை ஈடு செய்ய செப்டம்பர் 16ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.