தமிழகத்தில் இன்று கனமழை எதிரொலியாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் அதாவது 1 முதல் 5 வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விடுமுறை வழங்கப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கனமழை காரணமாக வேலூர் மற்றும் திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கனமழை எதிரொலியாக மொத்தம் 21 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருவாரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.