2013 ஆம் வருடம்  மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் மூன்றாவது நாளே அந்தப் பெண் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்ற நிலையில் திரும்பி கணவர் வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்து கணவருடைய குடும்பத்தினர் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துள்ளனர். ஆனால் அந்த பெண் வீட்டிற்கு வர மறுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பெண்ணின் சார்பாக கணவரின் குடும்பத்தினர் மீது வரதட்சனை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே பெண்ணை விவகாரத்தை செய்வதற்கு அந்த மாப்பிள்ளை முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து மனு செய்த போது திருமணமாகி மூன்று நாட்கள் மட்டுமே மனைவி என்னுடைய வீட்டில் இருந்தார். முதலிரவில் என்னை பிடிக்கவில்லை குடும்பத்தின் கட்டாயத்தால் தான் திருமணம் செய்வதாக கூறினார். இதனால் தாம்பத்திய உறவு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்று கணவர் தரப்பில் வாதிடப்பட்டது. மனைவி தரப்பில் தேர்வெழுத தான் பிறந்த வீட்டுக்கு வந்தேன்.

ஆனால் அதை சாதகமாக பயன்படுத்தி அவர்கள் அதிக வரதட்சணை கேட்டனர். இதனால் அவரோடு வாழ விரும்பவில்லை என்று வாதம் வைக்கப்பட்டது. இதனால் நீதிமன்றம் விவகாரத்து வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து இளம் பெண் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு கணவரோடு தாம்பத்தியத்திற்கு மறுப்பது என்பது ஒரு வகையான கொடுமைதான். இதனால் சாத்னா நீதிமன்றம் வழங்கிய விவகாரத்தை மாற்றமின்றி உறுதி செய்கிறோம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.