
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடையாளம் தெரியாத ஒரு பெண், சாக்குப்பையில் அடைக்கப்பட்டு குப்பை லாரியில் வீசப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், அந்த பெண் தனது காதலனால் கொலை செய்யப்பட்டு குப்பை லாரியில் தூக்கி வீசப்பட்டுள்ளார் என்பதற்கான தகவல் வெளியானது.
சடலம் தெற்கு பெங்களூருவில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பல ஆதாரங்களை சேகரித்தனர். அதன் அடிப்படையில், 33 வயதான முகமது ஷம்சுதீன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
கணவரை இழந்த ஆஷா என்ற பெண்ணுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஷம்சுதீனுடன் உறவில் இருந்துள்ளார். இருவரும் ஹுலிமாவு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர். இருவரும் தலா இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
விசாரணையின் படி, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி, ஷம்சுதீன் தனது காதலியை கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் சடலத்தை ஒரு சாக்குப்பையில் அடைத்து, குப்பை லாரியில் வீசிச் சென்றதாக சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
இதைப்பற்றி பெங்களூரு காவல்துறை இணை ஆணையர் சி.வம்சி கிருஷ்ணா கூறுகையில், “அந்த பெண்ணின் கைகள் மற்றும் கழுத்து கட்டப்பட்டிருந்தன. உடல் முழுவதும் சாகுபையில் அடைக்கப்பட்டு குப்பையில் வீசப்பட்டது. பிபிஎம்பி ஊழியர்கள் எங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடக்கிறது” என்றார்.