
கடலூர் மாவட்டத்தில் உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் இளவரசி என்பவர் பெண் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கலைவேந்தன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இளவரசி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சித்தலபாடி பகுதியில் வைத்து இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் இளவரசியும், கலை வேந்தனும் சம்பவ இடத்துலயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.