![](https://www.seithisolai.com/wp-content/uploads/2023/07/099dd4ef-dd87-4bcb-ae15-49050790b6b3.jpg)
சென்னை மெரினா கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு மீனவர் அமைப்பினர், நாம் தமிழர், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவை தமிழக அரசு திரும்ப பெற உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கருணாநிதி நினைவிட வளாகத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.