
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார். இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று பழனியம்மாள்(95) உடல்நலக் குறைவால் காலமானார்.