தென் ஆப்பிரிக்க நாட்டில் நடந்த ஒரு படுகொலை சம்பவம் மிகவும் பயங்கரமாகவும் அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது. அதாவது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு கிராமப்புற வீட்டுத் தோட்டத்திற்கு முன்பாக 18 பேர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். குறிப்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டனர். அதாவது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக துப்பாக்கி ஏந்திய மர்ம  நபர்கள் வீட்டிற்குள் புகுந்து 18 பேரை பயங்கரமாக துப்பாக்கியால் சுட்ட நிலையில் 17 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர்.

அதன் பிறகு ஒருவர் மட்டும் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதில் 15 பேர் பெண்கள். அதன் பிறகு கொலை செய்யப்பட்டவர்களின் வயது 14 முதல் 64 வரை இருக்கும். கடந்த 28-ம் தேதி  பாரம்பரிய விழாவிற்காக குடும்பத்துடன் அனைவரும் குடியிருந்த நிலையில் இந்த பயங்கர சம்பவம் அரங்கேறிய நிலையில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது நபர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.