
தேனி மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரத்தில் தினகரன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு பிரியா(23) என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் அடிக்கடி செல்போன் பேசிய பிரியாவை அவரது கணவர் கண்டித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தினகரன் வீட்டில் இருந்தபோது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் வீட்டிற்கு வெளியே சென்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து கோபமடைந்த பிரியா நீ மட்டும் செல்போன் பேசலாமா? என தனது கணவரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
மேலும் செல்போனை பறித்து கீழே வீசினார். அதனை தினகரன் எடுக்க சென்றபோது கையில் வைத்திருந்த கத்தியால் தனது கணவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் தினகரனின் கை மற்றும் நெஞ்சில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.