
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று சென்னையில் மூன்றாம் கட்ட பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதாவது நடிகர் விஜய் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் ரொக்கப்பணம் வழங்குகிறார்.
அந்த வகையில் இன்று மூன்றாம் கட்ட பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டார். இந்த விழாவின்போது ஒரு மாணவி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நடிகர் விஜய் மாணவிகள் மீது கை போட்டு பேசுவதாக கடுமையாக விமர்சித்திருந்தார்.
குழந்தைகள் எல்லாம் டோல்கேட்டு வண்டு முருகனை அடித்து நொறுக்குகிறார்கள் 😂 https://t.co/GLV8d6XzdA
— Sangeetha -TVK✨ (@sangeet29332013) June 13, 2025
மாணவிகளின் தோள் மீது நடிகர் விஜய் கை போட்டு பேசுவதை பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என அவர் மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற விழாவின்பின் போது விஜய்யிடம் இருந்து விருது வாங்கிய ஒரு மாணவி இது பற்றி பேசினார். அவர் பேசியதாவது,
பரிசுகள் வழங்கும்போது விஜய் தோளில் கை போட்டு பேசுவதாக சில வீடியோக்களை பார்த்தேன். நாங்கள் விஜயை அப்பாவாக பார்க்கிறோம். நாங்கள் விஜய்யை எங்களுடைய அப்பாவாக, அண்ணனாக, எங்கள் உயிராக பார்க்கிறோம். எனவே இப்படி எல்லாம் பேசக்கூடாது. மேலும் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று கூறினார்.