ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புவோர் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் இணையலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மாத வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தனி நபருக்கு அதிகபட்ச முதலீட்டு வரம்பு 9 லட்சம் ரூபாய். ஒரு குடும்பத்தில் தம்பதியர் இருவரும் தபால் அலுவலகத்தில் கூட்டு கணக்கு மூலமாக 15 லட்சத்தை முதலீடு செய்யலாம். அப்படி 15 லட்சம் டெபாசிட் செய்தவர்கள் மாதம் தோறும் 9250 ரூபாய் வருமானம் பெற முடியும். கூடுதல் விவரங்களுக்கு தபால் அலுவலக இணையதளத்தை அணுகவும்.