சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லக்கூடிய விமானத்தில் பயணம் செய்வதற்காக இரு வாலிபர்கள் ஏர்போர்ட்டுக்கு வந்த நிலையில் குடியுரிமை அதிகாரிகள் விமானத்தில் செல்லும் பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த இரு வாலிபர்களையும் சோதனை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதில் ஒருவரின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தார். அவரது செல்போனில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி அவரை கொலை செய்ய வேண்டும் என்ற குறுஞ்செய்தி இருந்தது.

அந்த குறுஞ்செய்தி யாருக்கு அனுப்பப்பட்டது என்று விசாரித்த போது அவருடன் இருந்த மற்றொரு நபருக்கு அனுப்பியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் காதலிக்க மறுத்ததால் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. அவர்களின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் பின்னர் போலீசருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாணவியை காதலித்த தன்ராஜ் (21) மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் (25) என்பது தெரிய வந்தது. இதில் தன்ராஜ் கடந்த இரண்டு வருடங்களாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார். ஒருதலையாக அவர் காதலித்த நிலையில் மாணவி காதலை ஏற்காததால் கொலை செய்ய திட்டத்தீட்டி தன் நண்பனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும் இதைத் தொடர்ந்து வாலிபர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.