சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசி பாளையத்தில் பால்ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளி பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு ரேகா(35) என்ற மனைவியும் ஜனனி(15) என்ற மகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் தொழில் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பால்ராஜ் பல பேரிடம் அதிக அளவு கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த பால்ராஜ் தனது மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சமூக இடத்திற்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.