
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ஆர்சிபி பேட்டிங் செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. கடைசிவரை களத்தில் நின்று போராடிய ஷஷாங்க் சிங் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் காரணமாக பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 18 வருடங்களுக்குப் பிறகு தங்கள் கோப்பை கனவை நனவாக்கியது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் முக்கிய விருதுகளை வென்ற வீரர்கள் மற்றும் அணிகள் குறித்து பார்ப்போம். அதன்படி மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் மிகுந்த மதிப்பு மிக்க வீரர் என்ற விருதினை பெற்றுள்ளார்.
அதன்பிறகு நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு நிறத் தோப்பியை குஜராத் அணியை சேர்ந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் வென்றுள்ளார். இவர் மொத்தம் 759 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்து ஊதா நிறத் தொப்பியை பிரசித் கிருஷ்ணா பெற்றுள்ளார்.
இவர் அதிகபட்சமாக 25 விக்கெட் எடுத்துள்ளார். இந்த வருடம் அணியை சிறப்பாக நடத்தியதற்காக பேர் பிளே விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழங்கப்படுள்ளது. அதன்பிறகு வளர்ந்து வரும் வீரர் என்ற வீரர் சாய் சுதர்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுபோக அதிக பவுண்டரிகள், பேண்டஸி பாயிண்ட்ஸ் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதன்மூலம் சாய் சுதர்சன் மொத்தம் நான்கு விருதுகளை வென்றுள்ளார். அதன் பிறகு ராஜஸ்தான் அணிக்காக களம்பிறங்கிய 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டக்காரர் விருதினை சென்றுள்ளார். இவருக்கு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு சாய் சுதர்சன் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு தலா 10 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குருணால் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.