சேலம் மாவட்டம் ஆலச்சம்பாளையம் பகுதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, திமுக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் கார் பந்தயத்தில் கவனம் செலுத்துகிறது. இந்த கார் பந்தயம் மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதியில் தேவையா.? இது ஏழை மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படுகிறது.

இதற்காக ‌ரூ.42 கோடி செலவு செய்கிறார்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் எதற்காக கார் பந்தயத்தை நடத்த வேண்டும். அதற்கு பதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த மைதானத்தில் இந்த கார் பந்தயத்தை நடத்தலாம். விளையாட்டுத்துறை அமைச்சர் மக்களுடைய வரிப்பணத்தில் விளையாட்டு செய்கிறார். ஏழை மக்களின் வரிப்பணத்தில் இது தேவையா. மேலும் மக்களின் பணம் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்று கூறினார்.