சமூக வலைதளத்தில் தற்போது ஒரு பெண்ணின் அலட்சியம் குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதாவது அந்த பெண் ஒருவருடன் பைக்கில் செல்லும் நிலையில் அவரது கழுத்தில் உள்ள துப்பட்டா பைக்கின் வீலுக்குள் செல்லும் நிலையில் இருக்கிறது. அவர்களுக்கு பின்னால் வந்த ஒருவர் எச்சரித்த போதிலும் அந்த பெண் கேட்கவில்லை. அந்த நபர் விடாமல் மீண்டும் மீண்டும் துப்பட்டா பைக் வீலுக்குள் சிக்குவது போல் இருப்பதாக எச்சரிக்கிறார். ஆனால் அந்த இளம் பெண் எதையும் கண்டுகொள்ளாமல் அவரிடம் வாக்குவாதம் செய்தவாரே செல்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் துப்பட்டா கழுத்தில் இருந்து வீலுக்குள் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் ஆகவில்லை. பின்னர் பைக்கை நிறுத்தி அந்த வாலிபரும் அந்த பெண்ணும் சேர்ந்து சக்கரத்தில் இருந்த துப்பட்டாவை மிகவும் கஷ்டப்பட்டு அகற்றினர். அந்த நபர் முன்கூட்டியே சொல்லும்போதே கேட்டிருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்காது. மேலும் அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்பதுதான் ஒரே ஒரு நல்ல விஷயம். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.