
உத்திரபிரதேச மாநிலத்தின் பில்கிராம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நடந்த பரபரப்பான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. காரில் சிஎன்ஜி நிரப்பும்போது, பாதுகாப்பு விதிகளின் கீழ் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரை காரிலிருந்து கீழே இறங்குமாறு கூறியதில், காரில் வந்த இளம் பெண் ரிவால்வரை எடுத்து ஊழியரின் மார்பில் வைத்துப் மிரட்டிய காட்சி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
दीदी की गुंडई समझिये। हरदोई में CNG भराने को लेकर विवाद हुआ. दीदी ने सेल्समैन के सीने पर रिवॉल्वर तान दी.
अब महिला अरीबा खां, हुस्नबानो, एहसान खां पर FIR दर्ज कर ली गई है और रिवॉल्वर जब्त कर ली गई है. घटना UP के हरदोई की है. pic.twitter.com/6bXEMCOA0B
— Priya singh (@priyarajputlive) June 16, 2025
பில்கிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அந்த பெட்ரோல் பம்பில், ரஜ்னீஷ் என்பவர் சிஎன்ஜி நிரப்பும் பணியில் இருந்தார். அப்போது ஷாஹாபாத்தைச் சேர்ந்த எஹ்சான் கான், தனது குடும்பத்துடன் காரில் வந்தார்.
ஊழியர்கள் பாதுகாப்புக்காக காரிலுள்ளவர்களை இறங்கும்படி கேட்டபோது, எஹ்சான் கானின் மகள் அரிபா என்பவள் கடும் கோபத்தில் உரிமம் பெற்ற ரிவால்வரை எடுத்து ரஜ்னீஷின் மார்பில் வைத்துத் அடையாளம் காண முடியாத அளவுக்கு சுடுவேன் என மிரட்டினார். அங்கிருந்தவர் சமாதானப்படுத்தி அந்த பெண்ணை அழைத்து சென்றனர்.
பாதிக்கப்பட்ட ஊழியர் ரமேஷ், சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் அளித்ததோடு, சம்பவத்தின் வீடியோ ஆதாரத்தையும் அளித்துள்ளார். ஹர்தோய் காவல் கண்காணிப்பாளர் நீரஜ் யாதவ் தெரிவித்ததாவது, அரிபா மீது சம்பந்தப்பட்ட குற்றச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் கூறினார். இந்த சம்பவம் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடையே பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது