Twitter நிறுவனத்தை பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் கைப்பற்றியது முதல் அந்நிறுவனம் பல அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பல முன்னணி ஊடகங்களுக்கு செய்தி வழங்கி வரும் ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல எனும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கை Twitter நிறுவனமானது திடீரென முடக்கியது.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு டுவீட்டர் நிறுவனம் அனுப்பிய மின் அஞ்சலில், ஒரு டுவிட்டர் கணக்கை தொடங்க வேண்டும் எனில் அதன் உரிமையாளர் 13 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் அந்த வயதை பூர்த்தி செய்யவில்லை என்பதால் ஏஎன்ஐ-யின் டுவீட்டர் கணக்கு முடக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சில மணி நேரத்துக்கு பின் ஏஎன்ஐ டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.