
எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மானியம் வழங்குவதற்காக இ மொபிலிட்டி ஊக்குவிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் மின்சார பைக்குகளுக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் மானியமும், எலக்ட்ரிக் 3 சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக 50000 மானியமும் வழங்கப்படும். இந்த திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.