
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குரிய அடிக்கல் பிரதமர் மோடியால் 4 வருடங்களுக்கு முன்நாட்டப்பட்டது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை. இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மக்களவையில் திமுக எம்பிக்களுக்கும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான நிதியை முந்தைய அ.தி.மு.க அரசு கேட்டு பெற தவறிவிட்டதாக சாடினார். தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. சென்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை காண்பித்தும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி இதுவரையிலும் துவங்கவில்லை என கிண்டலடித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளானது அடுத்த ஆண்டு துவங்கி 2028ம் வருடம் முடிவடையும் என அமைச்சர் கூறினார்.