
பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என் மூச்சு உள்ளவரை நான் தான் பாமக கட்சியின் தலைவராக இருப்பேன். 2026 தேர்தலுக்குப் பிறகு தலைவர் பதவியை அன்புமணியிடம் கொடுத்து விடலாம் என நினைத்தேன். ஆனால் அவரது செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சு உள்ளவரை நான்தான் பாமக கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளேன். என்னுடைய உத்தரவின்படி அன்புமணி செயல்தலைவராக செயல்படுவேன் என கூறினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
ஆனால் என் மூச்சு உள்ளவரை நான் தான் பாமக கட்சியின் தலைவராக இருப்பேனே தவிர அன்புமணிக்கு அந்த பதவியை கொடுக்கவே மாட்டேன் என்றார். மேலும் நேற்றும் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பாமக கட்சியின் தலைவராக தான் இருப்பதாக கூறியதோடு அன்புமணியுடன் பேச்சுவார்த்தை டிராவில் முடிந்ததாகவும் இனி நீயா நானா என பார்த்துவிடலாம் என முடிவு செய்துவிட்டேன் என்று கூறினார். அதோடு அன்புமணி மீது பல அடுக்கடுக்கான குற்றசாட்டுகளையும் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.