கன்னியாகுமரி மாவட்டம் என் ஜி ஓ காலனி அருகே உள்ள பிள்ளையார்புரம் பகுதியில் டேனியல் ராசய்யா மற்றும் ஜெனி சார்லெட் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் மூத்த மகளுக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் தாய் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் சமையலறையில் இருந்த மண்ணெண்ணையை தனது உடல் மீது ஊற்றி தாய் தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.