
உத்திரபிரதேசம் மாநிலம் பல்லன் கிராமத்தைச் சேர்ந்த ராஜுலியா(45) என்ற பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள குளத்தின் அருகே பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதை பார்த்த அருகிலுள்ளவர்கள் இச்சம்பவத்தை பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜுலியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி ராஜுலியாவின் மகளான நீதுவிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் கிடுக்குபிடியில் விசாரணை நடத்தினர். இதில் ஜூலை 29 ம் தேதி இரவு நீதுவும் அவரது காதலனுமான அதுல் ஆர்க் ஆகியோர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்துள்ளனர். இதைப்பார்த்த அவரது தாயார் நீதுவையும், அதுல் ஆர்க்கையும் திட்டியதில் கோவமடைந்த இருவரும் அவர்களது நண்பரான தாதுவா ரைதாஸின் உதவியுடன் ராஜுலியாவை கொலை செய்வதற்காக அவரது கழுத்தைப் பிடித்து அழுத்தி உள்ளனர்.
இதில் அவருக்கு கழுத்து எலும்பு முறியப்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்துள்ளார். அதன்பின் இவர்கள் ராஜுலியாவின் உடலை அருகிலுள்ள குளத்தில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளது. தன் மக்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கவேண்டும் என்று நினைத்த தாய்க்கு, மகளே எமனாக அமைந்துவிட்டால்.. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்பின் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நீது மற்றும் அவரது காதலன் அதுல் ஆர்க் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த இவர்களது நண்பரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.