
மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், ராஜாத்தி (65) என்ற தம்பதியினர். இவர்களுடைய மகன் பாலாஜி கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் அவருடைய தாய் ராஜாத்தி மிகவும் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 21-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த ஆசிட்டை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.