
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சண்முகம், சம்பூர்ணம் என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் மனநல பாதிக்கப்பட்டவர். இதனால் அதற்கான சிகிச்சைகளும் எடுத்துக் வந்துள்ளார். இவருக்கு சத்தம் அதிகமாக கேட்கும் போது மனநிலை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செந்தில்குமார் வீட்டில் சில குழந்தைகள் சத்தமிட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்து செந்தில்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சோபாவில் அமர்ந்திருந்த தஷ்மிதா என்ற 10 வயது சிறுமியை கழுத்தில் வெட்டியுள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தங்கராஜ் மற்றும் முத்துவேல் ஆகியோர் செந்திகுமாரை தடுக்க முயன்றபோது, அவர்களையும் கத்தியால் வெட்டியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார் மற்றும் அவரது தாயாரை கைது செய்தனர்.
அதன் பின் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மேல் கண்ட விவரங்கள் தெரிய வந்தது. இந்த சம்பவம் காரணமாக கடந்த 28-ம் தேதி தஷ்மிதாவின் தந்தை மற்றும் உறவினர்கள் என சுமார் 150 பேர் குமரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையின் தந்தை என் மகளை கழுத்தறுத்து அவன் கொல்ல பார்த்தான் என்று கதறி துடித்தது அங்கிருந்தவர்களை மிகவும் கலங்க வைத்தது. மேலும் அவர் கூறியதாவது, எனது மகளிடம் செந்தில்குமார் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடும். அதனை என்னிடம் குழந்தை தெரிவிக்கக் கூடாது என்பதற்காக கத்தியால் வெட்டியுள்ளார் என்று கூறியுள்ளார்.