உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சார்பாக் ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பெண் தன்னுடைய கை குழந்தையுடன் ரயில்வே நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் குழந்தையை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அந்த பெண் போலீஸ்காரரை செருப்பை கழட்டி அடித்தார்.

இதனால் கோபத்தில் அந்த போலீஸ்காரர் பெண்ணை தள்ளிவிட்டார். இதனை தடுக்க வந்த ஒருவரையும் போலீஸ்காரர் அடித்து தாக்குகிறார். அந்த பெண் தொடர்ந்து அவரை செருப்பால் அடிக்கும் நிலையில் அந்த பெண்ணை தள்ளிவிட்டுக்கொண்டே இருக்கிறார். அந்த போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.