
மலையாள திரை உலகின் பிரபல இயக்குனரான ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்த திரைப்படம் பணி. இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் குறித்து நெட்டிசன்கள் சிலர் எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அதில் ஒருவர் தான் ஆதர்ஷ்.
இந்நிலையில் படத்தின் நடிகரும் இயக்குனருமான ஜோஜு ஆதர்ஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாக பேசியுள்ளார். என்னை நேரில் சந்திக்க உனக்கு தைரியம் இருக்கிறதா என்று கேட்க படத்தில் ஒரு கற்பழிப்பு காட்சியை அப்படி சித்தரிக்கக்கூடாது என்று ஆதர்ஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
அதற்கு ஜார்ஜ் ”தயவுசெய்து எனக்கு கற்றுக்கொடுங்கள். நான் உங்களிடம் வருகிறேன். நீங்கள் நாளை எங்கே இருப்பீர்கள்?” என்று கேட்டுள்ளார். இதற்கு ஆதர்ஷ் நான் கூறிய ஒரு எதிர்மறையான கருத்துக்கு எதற்காக இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்று கேட்டபோது ஜார்ஜ் “நான் உண்மையில் உணர்ச்சிவசப்பட்டு இருந்தால் நீ உன் பேண்ட்டில் சிறுநீர் கழித்து இருப்பாய்” என்று மிரட்டி உள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் ஜார்ஜின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.