
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற பல்வேறு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் எலான் மஸ்க் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் சோகமான சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது இவர் சமீபத்தில் கொடுத்த ஒரு நேர்காணல் நிகழ்ச்சியின் போது தன்னுடைய குழந்தைகள் பற்றி பேசியுள்ளார்.
அப்போது தன்னுடைய மகன் பற்றி பேசும்போது மிகவும் எமோஷனல் ஆனார். எந்த கேள்வி கேட்டாலும் சட்டென பதில் சொல்லும் எலான் மஸ்க் தன்னுடைய மகனைப் பற்றி பேசும்போது தடுமாறி எமோஷனல் ஆகிவிட்டார். அதாவது தன்னுடைய மகன் woke mind எனும் வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். இது உண்மையாகவே ஒரு வைரஸ் பாதிப்பு கிடையாது.
அதாவது பாலினமாற்று அறுவை சிகிச்சையை எதிர்ப்பவர்கள் தான் இப்படி கூறுகிறார்கள். இதைத்தான் வைரஸ் என்று கூறிய எலான் மஸ்க் உலகில் இருந்து இந்த வைரஸ் நோயை முற்றிலும் அழிக்காமல் விடமாட்டேன் என ஆதங்கத்துடன் கூறியுள்ளார். மேலும் அவருடைய மூத்த மகன் சேவியர் எலான் மஸ்க்கை ஏமாற்றி பாலினமாற்று அறுவை சிகிச்சை விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கியதோடு அந்த அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.
அந்த விண்ணப்பத்தில் கையெழுத்து போடவில்லை என்றால் சேவியர் தற்கொலை செய்து கொள்வான் என்று கூறி ஏதேதோ சொல்லி கையெழுத்து வாங்கியுள்ளனர். அது கொரோனா அதிகமாக இருந்த காலம். அதனால் தன்னுடைய மகன் இறந்து விட்டான். நான் அவனை இழந்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்னை ஒரு திருநங்கையாக அறிவித்த சேவியர் அவருடைய பெயரையும் மாற்றிக் கொண்டதோடு தனக்கும் தந்தைக்கும் இனி எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
JUST IN: Elon Musk says his son is “dead” thanks to the woke mind virus after he was put on puberty blockers, says he vowed to “destroy the woke mind virus after that.”
🔥🔥
“I was essentially tricked into signing documents for one of my older boys… This was before I had… pic.twitter.com/wfWztIziTs
— Collin Rugg (@CollinRugg) July 22, 2024