மத்தியப் பிரதேசத்தில் தெற்கு பருவமழை ஆரம்பமாகியதிலிருந்து, பாம்புகள், தொற்றுநோய்கள் மற்றும் விஷவிலங்குகள் அதிகமாக வீடுகளுக்குள் புகும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இதனால் பாம்புக்கடியால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ருண்மன் என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 7 நாட்கள் இடைவெளியில் இரு பிள்ளைகள் பாம்புக்கடிக்கு பலியாகி பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் லகன் பிரசாத் என்பவரின் பிள்ளைகளாகும். அவருடைய மகன் ஆர்யன் (வயது 8) கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் தன் படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பொன்றால் கடிக்கப்பட்டுள்ளார். உடனடியாக லவ்குஷ்நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பின் அவர் தூங்கிய படுக்கையிலேயே இறந்த நிலையில் அந்த பாம்பு கிடைத்தது.

அதிக வேதனையை ஏற்படுத்துவது என்னவென்றால், அந்த விஷ  பாம்பு, அதற்கு  7 நாட்களுக்கு முன்பு ஆர்யனின் அக்கா (வயது 16) என்பவரையும் தூங்கிக் கொண்டிருந்தபோது கடித்திருப்பதாக கூறப்படுகிறது. அவரும் சிகிச்சை பெறும் நிலையிலேயே உயிரிழந்தார். ஒரே பாம்புக்கடியில் இரு பிள்ளைகளையும் இழந்த குடும்பம் தற்போதும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது. கிராமத்திலே நேர்ந்த இந்தச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.