விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கொந்தராயன் குளத்தில் பாலகிருஷ்ணன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து போடி செல்லும் அரசு பேருந்தை பாலகிருஷ்ணன் இயக்கினார்.

இந்த நிலையில் கடையநல்லூர் அருகே சென்ற போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாலகிருஷ்ணன் நவம்பர் 15-ஆம் தேதி அதிகாலை விஷம் குடித்தார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.