இத்தாலியை சேர்ந்த மொரிசியோ கட்டெலன் என்பவர் டேப் மூலம் சுவரில் ஒட்டிய வாழைப்பழத்தை வடிவமைத்துள்ளார். இது நியூயார்க்கில் 6.2 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. உலக அளவில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட பழம் இதுதான். நாம் அன்றாடம் சாப்பிடும் இந்த வாழைப்பழம் இந்திய மதிப்பில் 52 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதனை அறிந்த நெட்டிசன்கள் அப்படி இந்த வாழைப்பழத்தில் என்ன இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.